பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93


“ ஆஹா நானும் என் திருமதியைக் கட்டாயம் அழைத்து வந்துவிடுகிறேன் ' என்ருன் ராமனுதன் வெற்றிப் புன்னகை வசந்தம் பாட. ராமனுதனும் மாதவனும் ஒரு முகமாக சிதம்பரத்தை நோக்கினர்கள். அவர்களது முகங்களில் கேள்விக் குறி தொக்கி நின்றது. சிதம்பரத்தின் முக மண்டலம் எந்தப் பதிலையும் தெரிவிக்கக் காணேமே ! அவன் ஏனே தலைபைக் ழே தாழ்த்திக் கொண்டவாறு, தாம்பூலத் தட்டில் கிடந்த கிராம்பொன்றை எடுத்து உதட்டில் சுவைத்துக் கொண் டிருந்தான். " சிதம்பரம், நீங்களும் தான் என் கல்யாணத்துக்கு உங்கள் மனைவி சகிதம், தம்பதி சமேதராக எழுந்தருள வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன் ' என்ருன் தியாக ராஜன். உரிமையுடன் அன்பில் பிறந்த பாந்தவ்யமும் அவன் குரலில் உறவாடின. ' ன்னியுங்கள், தியாகு. இந்த ஜன்மத்தில் உங்கள் ஆசை வேண்டுகோளை என்னுல் நிறைவேற்ற முடியாததற்கு ரொம்பவும் வருந்துகிறேன். அது என்னுடைய மறந்த கன வாசிவிட்ட பழங்கதை !...” சிதம்பரத்தின் பேச்சில் அளவிட முடியாத ஆருத்துயர் இழைபாய்ந்திருந்தது. ஏன் இத்தனை ஏக்கம் ? ஏன் இவ்' வளவு விரக்தி மனப்பான்மை ? காரணம்...! " காரணம் என்ன ? ஏன் அப்படி நீங்கள் கரம் பற்றிய உயிர்த் துணைவியை உதாசீனம் செய்து ஒதுக்குகிறீர்கன்...... என்ருன் தியாகராஜன் மறுபடியும் இடைமறித்து. சிதம்பரத்தின் இதழ்களில் பசை பாய்ந்திருந்திருக்கு மோ ? ஏன் அவன் அப்படி வாய்மூடி மெளனியாகிவிட்டான்? சிதம்பரம் பெண்ணின் வாழ்வு தன் கணவனின் இன்ப அரவணைப்பில், அன்புப் பராமரிப்பில் தான் பரி பூரணம் அடைகிறது. அவள்-உங்கள் மனைவி உங்களுக் குரியவள்; உங்கள் வாழ்வுதான் அவளுக்கு வையம்; உங்கள்