பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை - எந்தவிதம் மறந்தார் ? Π எந்தவிதம் மறந்தாரோ - என்னை நொந்து மெலிந்திடவே பிரிந்தாரே -எந்த வந்திடுவேன் மழைக் காலத்திலே என்ருர் வாராமலே இன்னும் வாட்டியே கொன்ருர் -எந்த வாட்டமுகங் கண்டால் நெஞ்சம் நெகிழ்ந்திடக் கெஞ்சுவார் வம்புகள் செய்துபின் வாரியணைத்தெனைக் கொஞ்சுவார் சேட்டைமொழிபேசி முத்தங் கொடுத்தெனக் கூடுவார் செப்பமான தமிழ்ப்பாடல் மகிழ்ந்திடப் பாடுவார் -எந்த 63