பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை என்ன செய்து விட்டாய்? எடுப்பு எதனைச் செய்தே உயர்ந்துவிட்டாய் - நீதான் எதல்ை உலகிற் சிறந்துவிட்டாய்? -எதனை தொடுப்பு இதயம் ஒன்றை மறந்துவிட்டாய் - கண்கள் இருந்தும் ஒளியைத் துறந்துவிட்டாய் -எதனை முடிப்பு சிரிக்கத் தெரிந்தும் மறைத்துவைத்தாய் - நீயே சிந்தையில் அன்பைக் குறைத்துவைத்தாய் திறக்குங் கதவை அடைத்துவைத்தாய் - நெஞ்சில் தீமைகள் யாவும் படைத்துவைத்தாய் -எதனை எதல்ை நீதான் செருக்கடைந்தாய்? - உள்ளம் இல்லை அதல்ை உருக்குலைந்தாய் உதவும் நினைவை இழந்துவிட்டாய் - வினில் உடலால் சுமைபோல் வளர்ந்துவிட்டாய் -எதனை பள்ளியில் எல்லாம் படித்துவிட்டாய் - ஆனல் படித்ததை அங்கே முடித்துவிட்டாய் தெள்ளிய அறிவைக் கெடுத்துவிட்டாய் - அதனைத் தீமைக் கெனவே கொடுத்துவிட்டாய் --எதனை 1 21