பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை தமிழ் - என் தந்தை முன் னைத் தமிழ் மொழியே! - உலகில் மூப்பறி யா முதலே! என்னை மகன் எனவே - புவியில் ஏற்றமுடன் அளித்தாய் கற்றுத் தெளி வதற்கே - ஆசான் கண்டு பயிற் றுவித்தாய் முற்றும் உணர்ந் தவளும் - அந்த முன்னவன் வள் ளுவளும் முத்தமிழ் வா னர்கள் சூழ் - அவையில் முந்தி யிருந் திடவே அத்தனே என்னை யுமோர் - சான்ருேன் ஆக்கி மகிழ்ந் தனேநீ துனது கலம் பகமாய்ப் - பெருகும் தோழர்கள் பற் பலராம் தீது விளைப் பவராய் - அமையின் செப்பித் திருத் துவை நீ குற்றமொன் றில் லதுவாம் - நல்ல கோல மனை வளித்தாய் கற்றவன் கட் டியதே - அதுதொல் காப்பியம் என் பதுவே 32