பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை நடந்தது என்ன? == செவிலி: அன்னம் தளர்ந்திட முன்னம் நடந்தவள் ஆடி நடந்தனள் கண்ணம்மா - இதில் என்ன நடந்தது பொன்னம்மா - கதை எங்கு நிகழ்ந்தது சொல்லம்மா தோழி: கொன டை முடித் திரு தண்டை ஒலித்தெழில் கொஞ்ச நடந்தனள் சோலேயே - காதல் கொண்டு தொடர்ந்தொரு காளையே - இந்தக் கோலம் விளைத்தனன் மாலேயே செவிலி: கன்னம் சிவந்தது கண்ணும் சிவந்தது கன்னி தளர்ந்தனள் கண்ணம்மா - எது முன்னஞ் சிவந்தது செல்லம்மா - கதை முற்றும் விளங்கிடச் செல்லம்மா தோழி: கட்டி யணைத்தவன் முத்தங் கொடுத்திடக் கன்னஞ் சிவந்தது முன்னமே - இடை தொட்டுப் பயின்றவன் சின்னமே - விழி செக்கச் சிவந்தனள் அன்னமே 64