பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை _ --- _ பஞ்சணை தூங்கிடுவேன் - தமிழால் பாடி எழுப்பிடுவாள் கொஞ்சு மொழிபேசி - வெந்நீர் குளித்திட வாருமென்பாள் நெஞ்சினில் அன்பொழுக - அப்பம் நெய்யொழுகத் தருவாள் வஞ்சி விடைதருவாய் - என்ருல் வாள் விழி காட்டிடுவாள் சென்றிடு வேன் அலுவல் - மனையில் செய்வ ைசெய்திடுவேன் ஒன்றும் மணியோசை - கேட்டால் ஓடிடு வேன்.அவள்பால் முன்றினில் நின்றிருப்பாள் - வாயின் முத்துக்கள் காட்டிடுவாள் கன்றிடத் தந்திடுவாள் - முத்தம் கணக்கில் அடங்காவே உடைகளை மாற்றிவிட்டுக் - காற்றில் உலவிடச் சென்றிடுவோம் கடைகளும் சென்றிடுவோம் - நல்ல கட்டுப்பூ வாங்கிடுவா ள் நடைஎழில் காட்டி அவள் - அரும்பு நகைத்திடப் பால்கொணர்வாள் தடையொன்றும் இல்லாமல் - இன்பம் தந்திடு வாளவளே پاوه 76