பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை பாரதியின் குரல் வீதிகள் எங்கணும் என்புகழே - பாடி வெற்றி முழக்கிடும் மானிடரே சாதிகள் இன்னும் தொலைத்தீரோ - பொய்மைச் சாத்திரம் ஏதும் விடுத்தீரோ? ஆடியும் பாடியும் கூத்தடிப்பீர் - என்றன் ஆர்வமெ லாம்எங்கோ போட்டழித்தீர் பாடிய என்னுடைப் பாக்களிலே - அந்தோ பற்பல ஊனங்கள் ஆக்கிவிட்டீர்! தன்னலம் ஒன்றையே மேம்படுத்த - என்பால் சாகசக் காதலைக் காட்டுகிறீர் என்னுளம் யாதென எண்ணுகிலீர் - உமக் கேற்பவே என்னைச் சுழற்றுகிறீர்! தெய்வங்கள் பற்பல வேண்டுகிறீர் - பகைத் தீயை வளர்த் திங்கு மாளுகின்றீர் உய்யும் வழிசொன்ன என்மொழியைப் - புதைத் தோங்கிய மண்டபங் கட்டிவிட்டீர்! 91