பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை விடுதலை வேண்டும் வேண்டும் விடு தலையே - எனக்கு வேண்டும் விடுதலையே யாண்டும் பறந் திடுவேன் - வானில் யாவையும் கண்டிடுவேன் வண்ணப் பசுங் கிளியைச் - சிறையில் வாட்டி வதக்குவதோ சின்னஞ் சிறியவரும் - என்றன் சிந்தையைத் தேக்குவதோ என்னினம் வாழ்ந்திடவும் - செந்தமிழ் ஏற்றம் மிகுந் திடவும் மன்னுயிர்த் தா யகமே - உலகில் மாட்சிமை பெற்றிடவும் பாடுவ தென் தொழிலாம் - இதற்குப் பற்பல ஊறுகளோ ! நாடு மொழி இனமே - உயர நாடுவ தோர்குறையோ ? ജ് 35