பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருமைப்பாட்டின் அடிப்படை

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகஅரங்கில் தலையாய இடம் பெற்றுத் திகழ்ந்தது தமிழ்நாடு. மேற்கே உரோம் முதலாம் நாட்டவரும், கிழக்கே சீனம் முதலாம் நாட்டவரும் வளங்கொழிக்கும் தமிழ்நாட்டின் அகில், ஆரம், முத்து முதலாம் விளைபொருள்கள், உறையூர்ப் பூந்துகில் போலும் செய்பொருள்களின் விலை யாகத் தங்கள் நாட்டுப் பொற்காசுகளைக் கப்பல் கப்பலாக கொண்டு வந்து கொட்டிச் சென்றனர். அக் காட்சியைப் 'பொன்னோடு வந்து கரியோடு பெயரும் யவனர் இயற்றிய விளை மாண் நன்கலம்' எனப் படம் பிடித்துக் காட்டிப் பாராட்டுகிறது. பழந்தமிழ்ப்பா ஒன்று.

போர் வெறியின் விளைவு

தமிழ் நாட்டின் அப்பீடும் பெருமையும் இன்று இல்லை.மாறாகத் தமிழகம் நனிமிகத் தாழ்ந்து விட்டது. தமிழ் நாடு, வயல் வளத்திலும் வாணிக வளத்திலும் சிறந்து, உலக அரங்கின் அவ்வுயர்ந்த இடத்தில் அமரப் பெருந்துணை புரிந்தவர், தமிழ் நாட்டை அன்று ஆண்டிருந்த சேர, சோழ, பாண்டியராம் முடியுடைய மூவேந்தர்களே என்றாலும், அத்தமிழ்நாடு, பிற் காலத்தே நிலைகுலைந்து போனதற்கும் அவர்களே முழு