பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 75 'அடப்பாவி அவர்கள் கெடுப்பது போதாது, நீயும் அவர்களோடு சேர்ந்து'. 'பின் எப்படித்தான் முடிப்பது?” 'இன்று பெண்கள் நீங்கள் எழுதும் கதைகள் அல்ல; அவர்கள் பொறுப்பு அறிந்தவர்கள். டாக்டர்கள், இன்ஜினி யர்கள், நாளை பாராளுமன்றத்தில் அங்கத்தினர்கள், ஆட்சித் தலைமைப் பீடம். இது அவர்கள் நிலை. இதை எழுத முடியுமானால் எழுது; பழைய பஞ்சாங்கம்; ஆரம்ப எழுத்தாளர்கள் எடுத்தாண்ட வக்கிரங்கள் அவை இன்று எடுபடாது. அவள் ஒழுங்காகப் படித்துத் தேர்வு பெற்று ஒரு டாக்டர் ஆனாள்; மேல்நிலை அடைந்தாள் என்று எழுது, அதுதான் உன் எழுத்துக்கு மதிப்பு உண்டாகும்” என்று சொல்ல நேர்ந்தது. 12 நன்கொடை அவர் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து நன்கொடை வசூல்காரர்கள் வருவார்கள் என்று. இளம் பெண் அவள் கையை நீட்டுகிறாள்.கழுத்தில் அவளுக்குத் தளை இல்லை. அந்த நிலைக்கு அவள் தள்ளப்படவில்லை. தாலி கட்டிக் கொள்ள ஆசைப்படுகிறாள். அதற்காக அவள் தாய் உடன் கட்சி சேர்ந்து வாக்கு கேட்கிறாள். "என்னம்மா உங்களுக்கு?'