பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 அடி சறுக்கியது ஏற்கெனவே படித்துவிட்ட செய்தி; அதனால் அது இவர்களைக் கவரவில்லை. அதோடு அவர் விடுவதாக இல்லை. 'ஏழு பேர் ஒரு பெண்ணைக் கடத்தி' என்று ஆரம்பிக்கிறார். அவர் எதற்கு முக்கியத்துவம் தந்தார் என்பது விளங்கவில்லை. ஏழுபேர் என்பதற்காகவா, கடத்தல் என்பதற்காகவா விளங்கவில்லை. அதைப் பற்றி இவர் ஏன் கவலைப்படுகிறார் தெரியவில்லை. இதுவும் ஒரு சுவராசியமான செய்தி. இந்தச் செய்திகள் பேச அவருக்குத் தேவைப் பட்டன. கஸ்டமர்களை இழுத்துப் பிடிக்க இது அவருக்குக் கிடைத்த பிளே ரிகார்டுகள். அவற்றை முடுக்கி விடுகிறார். கதைகள் அனுபவங்கள் ஒன்றன்பின் ஒன்று தொடர்கின்றன. அவர் கை புதிய சானலைத் திருப்புகிறது. புதிய செய்தி பளிச்சிடுகிறது. 'இந்த வீடு இருக்கிறதே! இதில் இரவில் மந்திரி பேய் வந்து உலாவுகிறது' என்கிறார். - மாஜி அமைச்சர் ஒருவர் அந்த வீட்டில் வாழ்ந்து இருக்கிறார். ஊழல் மன்னன் என்ற பட்டம் பெற்றவர். அவர் பெயர் பிரபலமாக இருந்தது. அவர் மீது வழக்குகள் நிறையப் பதிவு ஆகி இருந்தன. அவர் வாழ்ந்து முடிந்த கதை: அதைப் பலர் சொல்லி இருக்கிறார்கள். - - - அவர் இப்போது இல்லை. அவர் விட்டுச் சென்ற வீடு மற்றும் சொத்துகள் அவை மறையவில்லை. - அவற்றைச் சுற்றிச்சுற்றி அவர் பேயாக உலாவுகிறார் என்று அவன் சொல்லுகிறான்.