கி.வா.ஜ.வின் சிலேடைகள் J 15
கன்னி. அதற்குமுன் உள்ள சிங்கம், மேடம் என்ற இராசிகளின் பெயர்கள் தொனித்தன. சிங்கத்தைக் கொள்ளாமல் மேடத்தைக் கொல்ல எண்ணினாள் என்றது ஒரு நயம். -
மை - கண் -
பொய்யை அழித்தவர் போற்றிய காங்தப்
பொருப்புடையான் - செய்யதிருவடி போற்றல் இலாதார்
செயல்ெனவே - - ஐயன் ஒருவன் தருமால் என அன்னை
ஆய்ந்தறியாள், - மையை அழித்தால் மடவர லின்கண்
வனப்புறுமே. -
பொருப்பு-மலை. ஐயன் ஒருவன் தரும் மால் எனதலைவியின் வேறுபாட்டுக்குக் காரணம் தலைவன் ஒருவன் தந்த காதல் என்று. மையை அழித்தால்-ஆட்டைப் பலி கொடுத்தால், மடவரவின் கண் வனப்பு உறுமே-இந்தத் தலைவியிடம் போன அழகு உண்டாகுமா? விரக நோயால் அழகு குலைந்து வருந்தும் இவள் நோயின் காரணம் அறிந்து மணம் செய்து கொடுத்தாலன்றி, இந்த ஆட்டைப் பலி கொடுப்பதால் பழைய்படி அழகு பெறுவாளா என்றபடி, . - -
கண்ணிலுள்ள மையை அழித்து விட்டால் இந்தப் பெண்ணினுடைய கண் அழகு பெறுமா என்று வேறொரு பொருள் தொனித்தது. மடவரவின்கண் பெண்ணி :னிடத்தில், பெண்ணின் கண்கள்.
கோட்டை - துருக்கம் மருக் கொண்ட நீபத் தொடையினன்
காந்த மலையினில்வேள்