பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 15

மோட்டுப் பூச்சி இருக்குமோ என்ற பயம் இவருக்கு. ஆனால் அதைச் சொல்லாமல், பிரம்படி என்றால் எனக்குப் பயம்' என்றார். அப்படி என்றால்-?’ என்று அன்பர் கேட்டபோது, உட்காரும் இடத்தில் அடியில் பிரம்புதானே இருக்கிறது?’ என்று தெளிவித்தார் இவர்.

பிட்டும் அடியும் நாகர்கோயிலில் ஒரு சமயம் இந்துக் கல்லூரியில் பேசப் போயிருந்தார் இவர். கூட்டம் முடிந்த பிறகு சிறு விருந்தளித்தனர். தமிழ் ஆசிரியர்கள் எல்லாரும் வந்திருந் தார்கள். மற்றச் சிற்றுண்டிகளுடன் ஆளுக்கு ஒரு நேந்திரம் பழமும் வைத்தார்கள். அப்போது ஒராசிரியர் தமக்கு வைத்த பழத்தைப் பாதியாக ஒடித்து ஒரு பாதியை மகாலிங்கம் என்ற தமிழ் விரிவுரையாளருக்குக் கொடுத் தார். இவர், 'சொக்கலிங்கத்துக்குப் பிட்டுக் கொடுப் .பார்கள். நீங்கள் மகாலிங்கத்துக்குப் பிட்டுக் கொடுக்கிறீர் களே! என்றார். அதை வாங்கிக் கொண்ட மகாலிங்கம், ‘'எது கொடுத்தாலும் சரி; அடி கொடுக்காமல் இருத் தால் சரி” என்றார். காம்பு உள்ள பகுதியைத்தான் அவருக்குக் கொடுத்திருந்தார். ஆகையால் உடனே இவர், 'அடியுந்தானே கொடுத்திருக்கிறார்?' என்றார். (பிட்டுவிண்டு, பிட்டமுது. அடி-அடிப்பாகம், அடிக்கும் அடி)

கட்டப் படித்தவர் விவேகானந்தர் கல்லூரியில் அமரர் டி. என். சேஷாத்திரி முதல்வராக இருந்த்ார். அவரும் இவரும் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். விவே கானந்தர் கல்லூரிக்குப் பேசப் போயிருந்தார். இவர். இவரை அறிமுகம் செய்து வைக்கும்போது திரு. சேஷாத்திரி, 'இவரும் நானும் கூட ப் படித்தோம்’ என்றார். இவர் பேசும் போது, இவர்கூடப் படித்தார்: நான் குறையப் படித்தேன்' என்றார். . -