பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ.வா.ஜ.வின் சிலேடைகள் 27

பால் காகிதம் இவர் சொற்பொழிவில் சொன்னது:

சென்னையில் மாடுகள் நல்ல புல்லையே தின்கிறதில்லை. காகிதம் முதலியவற்றைத் தின்கின்றன. அதனால் பாலுக்கு நல்ல மணமும் சுவையும் இருப்பதில்லை. ஒரு பையனை. 'பால் ஏன் வெளுப்பாயிருக்கிறது?' என்று கேட்டேன். 'மாடு காகிதத்தைத் தின்கிறதனால்!' என்று பதில் சொன்னான். 'காகிதத்தைத் தின்றால் பால் வருமா? என்று கேட்டேன். "ஆமாம்! அதனால் தானே தாம் எழுதும் காகிதத்துக்குப் பால் காகிதம் என்று பெயர் வந்தது?' என்றான் அவன். (பால் காகிதம், கரடாக் காகிதம் என்று இரண்டு வகை உண்டு. சுத்த வெள்ளை யாக இருப்பது பால் காகிதம்.)

தேதியூர்

தேதியூர்ச் சுப்பிரமணிய சாஸ்திரிகள் மகா மேதை. வட மொழியில் வல்லவர். புராண இதிகாசப் பிரசங்கங்கள் செய்கிறவர். கடைசிக் காலத்தில் அவர் அதிகமாக வெளியூர்களுக்குப் போகவில்லை. 'கோபம் உள்ளவராகை யால் அவரை வைத்துச் சமாளிப்பது அரிது என்று பலர் அவரை அழைப்பதில்லை.

மயிலைப் பக்த ஜன சபை என்ற ஒரு சபையை ஏற்படுத்தி அதற்குத் தலைவராக இருந்தார், கி.வா.ஜ. வாரந்தோறும் பஜனை நடைபெறும். ஆண்டுக்கு மூன்று க ல் யா .ை உற்சவம் நடைபெறும். ராதா கல்யர்ணம், சீதா.கல்யாணம், வள்ளி கல்யாணம் என்ற மூன்று. பஜனைகள், கச்சேரிகள், உபந்நியாசங்கள் அந்தக் காலங்களில் நடைபெறும்.

ஒரு முறை தேதியூர்ச் சுப்பிரமணிய சாஸ்திரிகளைப்

பேசுவதற்கு ஆழைத்திருந்தார். அவர் வந்து பேசினார். பேச்சின் முடிவில், "நான் இப்போது காலிதான். எப்போது