பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 31

நண்பர் கேட்டார். அவன்தான் நொடியில் விடுகிறேன்'

என்று சொன்னானே சொன்னபடி செய்கிறான்' என்று

இவர் பதில் சொன்னார்.

சத்தம் அதிகம்

ஒரு சமயம் டில்லிக்கு இவர் போய்க் கொண்டிருந்தார். எக்ஸ்பிரஸ் வண்டி வேகமாகப் போய்க் கொண்டிருந்தது, அதிகமாக இரைச்சலாக இருந்தது. உடன் இருந்த நண்பர், பேசவே முடியவில்லை. சத்தம் அதிகமாக இருக்கிறது” என்றார். "ஆமாம், இந்த வண்டிக்குச் சத்தம் அதிகந்

தானே?' என்றார் இவர்.

(சத்தம்-ஒலி, வண்டிக் கூலி.)

ஒரு பையன்

காஞ்சிபுரத்துக்கு ஒரு காரில் சில நண்பர்களுடன் இவர் பயணமானார். ஆசாரிய சுவாமிகளைத் தரிசிப்பதற்காகப் போனார்கள். காருக்குடையவர், அதிகமாகச் சாமான் களைக் கொண்டு வராதீர்கள்; வண்டியில் ஜனத்தொகை அதிகம்' என்று எச்சரித்தார். இவர் ஒரு சிறிய, பை மாத்திரம் வைத்திருந்தார். "நான் ஒரு பையன்: இடம் இருக்கும் அல்லவா?’ என்று கேட்டார்.

(ஒரு பையன்-ஒரு சிறுவன், ஒரு பையை உடையவன்.)

தங்க வீடு

எந்த ஊருக்குப் போனாலும் குறிப்பிட்ட ஒரு வீட்டில் தர்ன் இவர் தங்குவார். காலையில் எழுந்து நீராடி ஜபம், தியானம் செய்வதற்கும், பல நண்பர்கள் வந்து பார்த்துப் போவதற்கும் வசதியாக இருபதற்காக, வெவ்வேறு இடமாக இருந்தால் சங்கடமாக இருக்குமென்று, ஒரே இடத்தில் த்ங்குவார். ஈரோட்டில் அட்வகேட் சேவுையர் வீட்டில்