32 கி.வா.ஜ.வின் சிலேடைகள்
தங்கியிருந்தார். இவரைப் பார்க்க அயலூரிலிருந்து ஒரு நண்பர் வந்தார். அவரோடு பேசிக் கொண்டிருந்தார். :மறுபடியும் அடுத்த மாதம் இங்கே வருவேன். அப்போதும்
பார்த்தலாம் என்று இவர் சொன்னார். 'அப்போது எங்கே தங்குவீர்கள்?' என்று வந்தவர் கேட்டார். இவர் சொன்ன விடை: "நான் எப்போதும் இங்கேதான்
தங்குவேன். மற்ற வீடுகளெல்லாம் செங்கல் வீடு. இது எனக்கு எப்போதும் தங்க வீடு.'
தொண்டை அடைத்தது
ஒ ரூ ரு க் கு ப் பே ச ச் சென்றபோது இவருடைய தொண்டை கட்டியிருந்தது. பேச வரவில்லை. பிறகு ஒரு முறை வந்து பேசினார். அப்போது முன்முறை வந்தும் பேச முடியாமல் போனதை இவர் குறிப்பிட்ட விதம்: :சென்ற முறை இங் .ே க வந்தபோது தொண்டை. அடைத்தது; என் தொண்டை நட க் க வி டா ம ல்
அடைத்தது.' х
உரித்து
தம் வீட்டுக்கு வந்த பெரி ய வ ைர உபசரித்துக்
கொண்டிருந்தார் இவர்.ஆரஞ்சுப் பழத்தைச்சுளையிலிருந்து
விதையை நீக்கி அளித்தார். நானே உரித்துக் கொள்கிறேனே. நீங்கள் ஏன் சிரமப்பட வேண்டும்?" என்று அந்தப் பெரியவர் கேட்டார். 'உங்களுக்கு உரித்து:
அளிக்கிறேன்: உரித்தளிக்கிறேன்” என்று பதில் சொன்னார்.
(உரித்து - உரியது. தோலை உரித்து.)
கொம்பு முளைத்திருக்கிறது.
. தம்முடைய பெயரைப் பலர் பல வேறு வகையில் எழுதி
வருவதைக் கண்டு இவர் வருந்துவார். ஜகந்நாதன் என்று.
எழுதுவதுதான் முறை. ஒருவர் ஏதோ நிகழ்ச்சிக்கு அழைத்