பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 33"

தார். பேசும் பொருளையும் இவர் பெயரையும் எழுதிக் காட்டி, இப்படிப் போடலாம் அல்லவா?' என்றார். "எனக்குக் கொம்பு முளைத்திருக்கிறதே!” என்றார் இவர். அன்பர் .ெ ஜ க ந் ந | த ன் என்று இவர் பெயரை எழுதியிருந்தார்.

நடைப் பிசகு

ஒரு கோயிலுக்கு அன்பர்களுடன் புறப்பட்டார் இவர். "டாக்ஸியில் போவோம்; இல்லாவிட்டால் ரிக்ஷாவில்

போவோம்' என்றார்கள் அன்பர்கள். வேண்டாம் ; நடந்தே போகலாம்' என்றார் இவர். நாங்கள் நடப் போம். உங்களால் நடக்க முடியுமா?' என்று அன்பர்கள் கேட்டார்கள். உங்களுக்கு நடைப்பலம் உண்டு. எனக்கு நடைப்பலம் இல்லையா? நடைப்பிசகு எ ன் னி ட ம் இல்லையே!' என்று இவர் சொன்னவுடன் யாவருமே. நடக்கலானார்கள். - -

பழநண்பர்

புதியதாக ஊரிலிருந்து ஒரு ந ண் ப ர் இவரைப் பார்க்க வந்தார். நிறையப் பழங்களை வாங்கி வந்தார். நீங்கள் புதிய நண்பர். ஆனாலும் இவற்றைப் பார்க்கும் போது பழ நண்பர் என்று தோன்றுகிறது' என்றார் இவர்.

கீச்சுக் கீச்சு

அ ரிய க் குடி இராமாநுஜையங்கார் சென்னையில் ஓரிடத்தில் திருப்பாவைப் பாசுரங்களைப் பாடிக் கச்சேரி செய்தார். அதைக் கேட்க இவருடைய நண்பர் ஒரு வ ர் போய் வந்தார். 'பாட்டு மிகவும் நன்றாக இருந்தது' என்றார். "கீசு கிசென்று பாடியிருப்பாரே என்றார் இவர். :: என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? எவ்வளவு அற்புதமான