பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 53

அது கோயிலுக்குச் சென்று நின்றது. அதைக் கண்டவுடன் சுந்தரர் யார்க்கும் சொல்லாமல் புறப்பட்டு விட்டார். தந்தி வந்தால் உடனே புறப்பட வேண்டியதுதானே? (தந்தி - செய்தித் தந்தி, யானை.)

அருகர் அல்ல

- நல்ல சைவராகிய புலவர் ஒருவர் சபையில் பேசத் தொடங்கினார். இவர் தலைமை தாங்கினார். அந்தப் புலவர் அவையடக்கமாகப் பேசுகையில், இவ்வளவு பெரிய புலவர்கள் பேசும் அவையில் நான் பேச அருகன் அல்ல. இருந்தாலும் அழைத்தார்கள்' என்று சொல்லிவிட்டுச் சொற்பொழிவாற்றினார். பின்னுரையில் இவர், 'இந்தப் புலவர் தம்மை அருகர் அல்லர் என்று சொன்னார். அது சரி, சைவரை அருகர் என்று சொல்லலாமா?” என்றார். ..(அருகர் தகுதியுடையார், சைனர்.)

குவளையும் தண்ணிரும்

எழுத்தாளர் திரு. அகிலனுடைய மகள் ஒருத்திக்குத் திருச்சிராப்பள்ளியில் திருமணம் நிகழ்ந்தது. அதற்கு இவர் போயிருந்தார். திருமண நிகழ்ச்சிக்குப் பின் யாவருக்கும் வி ரு ந் து வழங்கினர். எல்லோரும் சாப்பிட்ட பிறகு கை அலம்பப் போயினர். தொட்டியில் தண்ணீர் நிரப்பியிருந்த னர். தகரக் குவளையில் தண்ணீர் எடுத்துக் கொடுத் தார்கள். இவர் ஒரு குவளையில் தண்ணீர் வாங்கிக் கை கழுவிக்கொண்டே சொன்னார்: "தண்ணிரில்தான் குவளை இருக்கும். இங்கே குவளையில் தண்ணீர் இருக்கிறது.' (குவளை-தகரக் குவளை, குவளை என்ற மலர்.) -

கேசரியும் வாரணமும்

மன்னார்குடியில் ஒரு சபையில் சொற்பொழிவாற்றப் போயிருந்தார் இவர். வேறு புலவர்களும் வந்திருந்தார்கள்.