54 கி.வா.ஜ.வின் சிலேடைகள்
அண்ணாமலைப் பல்க ைல க் க ழக த் தி லி ரு ந் து: திரு. க. வெள்ளைவாரணனாரும் வந்திருந்தார். பிற்பகலில் எல்லோருக்கும் சிற்றுண்டி வழங்கினார்கள். இ னி ப் பு ம் காரமும் தந்தார்கள். கேசரி பரிமாறினார்கள். திரு வெள்ளைவாரணனார், 'எனக்குத் தடிமனாக இருக்கிறது. கேசரி வேண்டாம்' என்றார். அன்டர்கள் வற்புறுத். தினார்கள். அவர் மறுத்தார். இவர், "கேசரியைக் கண்டு வாரணம் அஞ்சுகிறது இயல்புதானே? இது உங்களுக்குத் தெரியவில்லையே!” என்றார். (கேசரி - ரவாகேசரி, சிங்கம்; வாரணம் - வெள்ளை வாரணனார், யானை.)
கோட்டையை விட்டார்
திருச்சியை அந்தப் பக்கத்திலுள்ளவர்கள் கோட்டை
என்று சொல்வார்கள். கோட்டைக்குப் போய் வந்தேன். என் பையன் கோட்டையில் வேலையாக இருக்கிறான்' என்பார்கள். இவருடைய உறவினர்கள் பலர் அங்கே
இருக்கிறார்கள். ஒரு நாள் உறவினர்களில் ஒருவர், 'நான் இப்போது திருச்சியில் இல்லை. ஊருக்கே வந்துவிட்டேன். இங்கே அங்கிருந்த வசதி இல்லை' என்றார். ஆமாம், கோட்டையை விட்டு விட்டால் சங்கடந்தான்' என்றார் இவர். &
கும்பத்தில் பிறந்தவன்
மிகச் சிறிய பிராயத்தில், 12-ஆம் வயசிலே இவர் கவி பாடுவார். வகுப்பில் இவர்தாம் மிகச் சிறியவர். உடற். பயிற்சி வகுப்பில் கடைசி மாணவர் இவர். இவருடன் படித்த மாணாக்கன் ஒருவன், “நீ குள்ளமாக இருக்கிறாய். த மி ழி ல் கெட்டிக்காரனாக இருக்கிறாய். உன் ைன அகத்தியன் என்று சொல்லத் தோன்றுகிறது” என்றான். உடனே இவர், “நானும் கும்பத்தில் உதித்தவன்தான்' என்றார். (கும்பம் - கலசம், கும்ப லக்கினம். எழுத்தாள