பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 55:

ரான பிறகு 'கு ம் ப என்’ என்ற புனைபெயரோடு. சிறு கதைகளை எழுதியிருக்கிறார்.) -

கண்ணும் மையும்

கலைமகள் காரியாலயத்தில் அச்சுக் கோப்பவர் புரூஃப்” கொண்டு வந்தார். அதில் அவர் கையிலிருந்த மை பல இடங்களில் பட்டிருந்தது. அருகில் இருந்த துணையாசிரியர், என்னப்பா, இப்படி மையைத் தடவிக் கொண்டு வரு, கிறாய்?' என்று கேட்டார். க ைல ம க ள் ஆசிரியர், "கண்ணைப் போல எண்ணிச் செய்திருக்கிறார். இதனிடம், எவ்வளவு மதிப்பு!' என்றார். -

காலாடி

இவருடைய நண்பர் ஒருவர் எதையாவது சுவாரசிய மாக எழுதினாலும் படித்தாலும் தம் கால்களை ஆட்டிக் கொண்டே இருப்பார். அதைக் கவனித்த இவர் அவரிடம், 'நான் சொல்வதைக் கேட்டுக் கோபம் அடையாமல் இருந் தால் ஒரு வி ஷ யம் சொல்கிறேன்' என்றார். அவர், 'என்ன?’ என்று கேட்டார். 'ஒரு நண்பர் உங்களைப் பற்றிச் சொன்னார். உங்களைக் காலாடி என்றார். அதைக் கேட்டு எனக்குக் கோபம் வந்தது. ஆனால் இப்போது அவர் சொன்னது உண்மை என்று தெரிகிறது' என்றார். என்ன சொல்கிறீர்கள்?' என்று நிமிர்ந்து கேட்டார் அந்த நண்பர். நீங்கள் சதா காலை ஆட்டுவதைக் கண்டேன், அவர் சொல்வது சரிதான் என்று பட்டது' என்றார். இவர்.

துதிக்கையிலே விநாயகர் அகவலைப் பற்றிச் சொற்பொழிவு ஆற்றினார் இவர். அப்போது சொன்னது.

விநாயகர் அகவல் பாடி முடித்தவுடன் விநாயகப் பெருமான் ஒ ள ைவ ப் பாட்டியைத் தம் துதிக்கையால்