பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள், - 77

மரிதுறவு

ஒரு துறவியைப் பற்றி அன்பர்கள் பேசிக் கொண்டி, ருந்தார்கள். அவர் ஒழுக்கம் கெட்டு வாழ்வதையும் பல பெண்களோடு தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதையும் எடுத்துச் சொல்லி அங்கலாய்த்தார்கள். முன்பெல்லாம் இப்படி இல்லை. இப்போதுதான் கெட்டுப் போய் விட்டார்” என்றார்கள். x i

அங்கே இருந்த இவர், "முன்பு துறவு இருந்தது; இப் போது மாதுறவு இருக்கிறது; அவ்வளவுதானே?' என்றார். (மாதுறவு பெரிய துறவு, மாது உறவு.)

பொடி வைக்கவா ?

இவருக்கு இட்டிலியைப் பரிமாறிய அன்பர், 'இதற்குப் பொடி வைக்கவா? சட்டினி போடவா?' என்றார். 'பொடி வைக்க வேண்டாம்: பேச்சிலே வைத்துக்கொள்ளுங்கள். இப்போது சட்டினியே போதும்' என்று இவர் சொன்னார். (பொடி வைத்தல் - மிளகாய்ப் பொடி வைத்தல், நயம் வைத்தல்.)

வாயில் காவலன் இவரை ஒரு கூட்டத்துக்குத் தலைமை தாங்கும்படி ஒர் அன்பர் வந்து கேட்டார். - . . . . . . . ;

"நான் சும்மா வந்து பேசிவிட்டுப் போகிறேன்." 'ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?’’ -

'தலைமை தாங்குவதும் ஒன்றுதான் கேட்கிப்பர் வேலையும் ஒன்றுதான்."

'என்ன, அப்படிச் சொல்லிவிட்டீர்கள்?