பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா 星靡”

நன்றாகப் படித்தவரெல்லாம் வாத்தியாராக முடியுமா? எவ்வளவோ படித்தவர்களைப் பார்க்கிறோம். புஸ்தகத்தில் பிள்ளையார் சுழி முதல் முற்றிற்று வரையில் படித்துத். தெரிந்துகொண்டிருப்பார்கள். ஏதாவது ஒரு விஷயத்தை, எடுத்துச் சொல்லுமையா என்றால் ஒரே குழப்பம் வந்து விடும். முன்னுக்குப் பின் பொருத்தமில்லாமல் உழப்புவார். சொல்லுகிற வி ஷ ய ம் இன்னதென்றே விளங்காது. கொஞ்சம் விளங்கினாலும் அழுத்தமாகப் பதியாது. உலக. அநுபவமும் கல்விப் பழக்கமும் உடைய நமக்கே புரியாதபடி இருந்தால், குழந்தைகளுக்கு அவர் எதைச் சொல்லித் தரப் போகிறார்? படிப்பு வேறு படித்ததைக் கற்றுத் தரும் சக்தி. வேறு. இரண்டும் யாரிடம் பொருந்தி யிருக்கின்றனவோ அவரே உபாத்தியாயர் வேலைக்குத் தகுதியானவர்.

கலையில் தெளிவு வாத்தியாருக்கு வேண்டுமென்று. நிறுத்தி விடாமல் மேலே கட்டுரை வன்மை' வேண்டு. மென்று சொல்கிறது இலக்கணம். ஒரு விஷயத்தை, கேட். பலர் உள்ளத்தில் பதியும்படி சொல்லும் திறமைதான் அது." கட்டுரை என்பது ஒரு கலை. அதில் நல்ல வன்மை இருக்க. வேண்டும். சும்மா என்னைத் தெய்வம் என்று கொண்டா டுங்கள் என்று வாத்தியார் ஐயா சொன்னால் ஜனங்கள் கொண்டாடி விடுவார்களா என்ன? உரைகல்வில் உரைத்துப் பார்த்து, ஐயா நல்ல மனுஷர்; நன்றாகப் படித்திருக்கிறார். சாமர்த்தியமாகச் சொல்லித் தருகிறார் என்று தேர்ந்தால் தான் கிராமத்து ஜனங்கள், 'வாத்தியாரையா, நமஸ்காரம் என்று கும்பிடு போடுவார்கள். இல்லாவிட்டால், 'அழுகற். பழம் அண்ணாவுக்கு’ என்ற பழமொழியைச் சொல்த், குப்பைத் தொட்டியில் போடும் பதார்த்தத்தைத்தான். நிவேதனம் செய்வார்கள். -

இவ்வளவும் சொன்னது போதாதென்று வாத்தியாரை வடிகட்டிப் பார்க்கும் இலக்கணக்காரர்கள், வாத்தியார்