பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா 及25 காரணம்? அவருடைய பாடத்திற்கும் அவனுடைய பணத் திற்கும் என்ன சம்பந்தம்? ஆகவே அவாவை உடையவரை ஆசிரியர் பதவியில் வைத்திருக்கக் கூடாதென்று தமிழர்கள் சொல்லி யிருக்கிறார்கள். கொடுக்க வில்லையே! என்ற குறை வாத்தியார் ஐயா உள்ளத்தில் தோன்றி விட்டால்: பிறகு அவர் எப்படி நன்றாகக் கல்வியைக் கற்பிக்க முடியும்? அடுத்தபடியாக வாத்தியார் ஐயாவுக்கு விரோதி வஞ்சகம். ஆசிரியர் உண்மையான ஞானம் வாய்ந்தவராக இருக்க வேண்டும். ஆசிரியர் கூட்டத்தில் அடிப்படியில் இருப்பவர் போதகாசிரியர்; மேற்படியில் உள் ள வ ர் ஆஞானாசிரியர். அவர்கள் ஒரே ஜாதியினர். ஆகையால் உள்ளத்தால் பொய்யாது ஒழுக வேண்டியது அவர்கள் கடமை. நேர்மைக்குணம் அவர்களுக்கு இன்றியமையாதது" தெரிந்ததை மறைத்து வைப்பதும், மாணாக்கனை வஞ்சிப் பதும் ஆசிரியரைப் பாவிகளாக்கிவிடும். மெய்யன்பு உடைய வர்களிடம் வஞ்சகம் இராது. வஞ்சகம் உள்ளவர்களிடம் அன்பு இராது. மாணாக்கர்களைச் சொந்தப் பிள்ளைகளைப் போலப் பாதுகாக்கக் கங்கணம் கட்டிக் கொண்ட வாத்தி யார் ஐயா அந்த மாணாக்கர்களிடத்தில் அன்பில்லாமல் பழகுவது நியாயமன்று. ஆகவே வஞ்சகம் அவரிடத்தில் எள்ளளவும் தலைகாட்டக் கூடாது.

மெத்தென்று விஷயங்களைக் கற்பிக்காமல் மாணாக்கர் களைப் பயமுறுத்திக் கற்பித்தல் கூடாது . வாத்தியார் ஐயா வின் குரலைக்கேட்டால் மாணாக்கர்கள் நடுங்கிவிடுவார்கள் என்று சொல்வது அவருடைய பெருமைக்குக் காரணமா காது. இனிமையாகப் பேசத் தெரியாதவன் வாத்தியார் வேலைக்கே வரக் கூடாது. வாத்தியார் வேலை முழுவதும் தாவில் இருக்கிறது; அந்த நாக்கு எவ்வளவு மிருதுவாக இருக்கிறது! பின்னும் அதில் இனிமை சேர வேண்டும். கடுமையான பேச்சினால் அச்சத்தை உண்டாக்கும் வாத்தி அயார் ஐயா, தம்முடைய பலஹlனத்தைத்தான் வெளிப்படுத்