விபூதி யோகம் 16.5 அன்னவர்க்கிரங்கி யான் அன்னவர் ஆத்ம இயல்பு யானாகி ஒளியுடை தொலைப்பேன். அர்ஜுன உவாச : பரம் பரஹ்ம பரந்தாம பவித்ரம் பரமம் பவான் புருஷம் சாச்வதம் திவ்ய-மாதிதேவ-மஜம் விபும் 12. பரமென் பிரமம் பரமென் சுடரே பரமென் கசிநீ யுனைநித் தியனென் புருடன் றிவியன் முதலென் கடவுள் புகுவன் எவனும் பிறவா னெனவே. 38.4 அர்ஜுனன் சொல்லுகிறான் : நீயே பரப்பிரம்மம். நீயே பர வீடு, தூய்மை யனைத்தினுஞ் சிறப்புடைய தூய்மை நீ நின்னையே "நித்திய புருஷ” னென்றும். ஆதிதேவ னென்றும். பிறப்பிலானென்றும், இறைமைக் கடவுளென்றும். ஆஹஸ்த்வாம் ருஷய:லர்வே தேவர்ஷிர் நாரதஸ் ததா அலிதோ தேவலோ வ்யாஸ:ஸ்வயஞ் சைவ ப்ரவீஷிமே 13. இருடிய ரெலோருமுரை செய்குந ருன்னை இவித மசிதன் றேவலனொடு வியாசன் சுரமு நிவனா ரதனுமுரை செய்துள்ளார் சுயமு மிதுவேதான் சொலல்தருதி யெற்கே 385 முனிவரெல்லாரும் மொழிகிறார். தேவரிஷி நாரதரு மங்ங்னே நவில்கிறார். அசிதரும் தேவலரும் வியாசரும் அங்ங்னமே செப்புகிறார். இங்கு நீ நேரே எனக்கு அதை உரைக்கின்றாய். ஸ்ர்வமேதத் ருதம் மன்யே யன்மாம் வதஸி கேசவ ந ஹி தே பகவன் வ்யக்திம் விதுர்-தேவா ந தானவா. 14. எற்கெதைச் சொனாய் முற்று மிதுமெய் யெனவு ணர்ந்துளேன். பகவ. கேசவ தெற்ற வேபுலன் செய்யு நின்றிறன் தேவர் தேர்கிலா ரகர ரில்லரென். 386 கேசவா. நினது "கிளவி யனைத்தையும் மெய்யெனக் கொண்டேன் பகவனே விண்ணவரும் அசுரரும் நின் விளக்கத்தை யறிவாரோ? (கிளவி-சொல்)