பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

நாய்க்கடிக்கு நாயின் ரோமம் மருந்தாகும். -ஹங்கேரி

வெந்நீரும், 'எனிமா'வும் கொண்டே எல்லாப் பிணிகளையும் குணமாக்கலாம். - இதாலி

[குடலில் நீரேற்றும் குழாய் 'எனிமா.']

பூடு ஏழு பிணிகளைத் தீர்க்கும். -ரஷ்யா

தலையில் வலி யெடுத்தால், மூட்டில் தைலம் தடவு.

-ஸ்பெயின்

உணவோடு சேர்த்து மருந்தைக் கொடுத்தால், நோய் குணமாகா விட்டாலும், பசியாவது ஆறும். - ஆப்பிரிகா

மரணம்

மரணத்தின் காரணம் பிறப்பு. - பௌத்தம்

மனிதன் பிறந்தவுடன் மரிக்கத் தொடங்குகிறான்.

- இங்கிலாந்து

இறந்தவனுக்குக் குளிரில்லை. -( , , )


திடீர் மரணம் திடீர் இன்பம் -( , , )

வைத்தியருக்கும் மரணம் உண்டு. -( , , )

மரணத்தறகு அஞ்சுபவன் வாழ்பவனாகான். -( , , )

பிறப்பது போலவே, இறப்பதும் இயற்கை. -( , , )

முற்றும் கனிந்த கனி முதலில் விழும். -( , , )

பிறக்கும் பொழுதுதான் நாம் அழுகிறோம், மரிக்கும் பொழுதன்று. -( , , )

எல்லா மனிதரும் சீரஞ்சீவிகளா யிருக்கவே விரும்பு கின்றனர். -( , , )

வாழ்வில் (நன்கு) வாழாதவன் மரணத்திற்குப் பின்னும் வாழமாட்டான். -( , , )

மறு வாழ்க்கையை அலட்சியம் செய்பவன் இந்த வாழ்க்கைக்குத் தீங்கிழைக்கிறான். - யங்