இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
67
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
இறைவா! உனக்கே ஏன் இவ்வளவு பெரிய தோல்விகள்? நீ, என்னைப் படைத்த நோக்கத்தில் நான் வாழ்கிறேன் இல்லையே! இன்று பஸ்மாசுரர்கள் எண்ணிக்கையில் மிகுதி. நீ வரத்தைக் கொடுக்கிறாய். பின் மாட்டிக்கொண்டு விழிக்கிறாய். ஏன் இந்த நிலை?
இறைவா, புரிகிறது நின் திருவிளையாட்டு. எது ஆனாலும் சொல்லிக் கொடுத்த சொல் வாழ்க்கைக்கு உதவாது. அவரவர் உணர்ந்தாக வேண்டும். பட்டறிவு பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை அறிவாளியாக்க நீ முட்டாளாக நடிக்கிறாய். என்னே உன் கருணை.
இறைவா, என் சிந்தையுள் நீ தெளிவாக இருந்தருள் செய்க! தெளிவான நோக்கம், தெளிவான அறிவு, இவையே என் வாழ்க்கையின் அரண்களாக விளங்க அருள் செய்க.