பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“தனக்குவமை” இல்லாதவன் “எண்குணத்தான்”.

எண்குணத்தான் என்பது,

தன்வயத்தனாதல், தூயஉடம்பினனாதல், இயற்கை
உணர்வினனாதல், முற்றும் உணர்தல்,
இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை,
முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை

எனும் எண் குணங்களுடையவன் என்பதாகும்.

கடவுள் உண்மையை விளக்கப் புகும் மெய்கண்டார், “அவன், அவள், அது” என்ற நூற்பாவில், முத்தொழிற்படுதலால் இறைவன் உண்டு என்பதும், எந்த ஒன்று தொழிற் பட்டாலும், தொழிற்படுத்தும் ஒருவரை அவாவி நிற்கும் என்பதும் நியதி என்பதைச் சுட்டுகிறார். இந்நூல் வழி, சித்தாந்த சைவம், கடவுளை நம்புகின்ற சமய வரிசையில் நிற்கிறது.

அடுத்து சித்தாந்த சமயம் கடவுளுக்குச் சொல்லும் சிறப்பு அவன் பிறப்பதுமில்லை; இறப்பதுமில்லை என்பது. சித்தாந்திகள் கடவுளின் அவதாரங்களுக்குக் கூட உடன் படுவதில்லை. இதனைத் திருவாசகம்,

தாயுமிலி தந்தையிலி தான் தனியன்

(திருச்சாழல்-3:2)

என்று பாராட்டும். சித்தாந்திகள் கொள்கைப்படி உலகிற்குத் தலைவன் கடவுள். ஆனால் செயற்கையாலன்று. இயற்கையின் வழி, நிறை நலம் நோக்க அவாவுதலின் காரணமாகச் சித்தாந்தச் செந்நெறியில் உயிர்களுக்குத் தலைவன் கடவுள். அவன் ஆண்டானும் கூட அங்ஙனம் அவன் தலைவனும் ஆண்டவனும் ஆதல் கூட உயிர்கள் விரும்பி ஆட்படுவதற்காகவே தவிர, நிர்ப்பந்தமாக அடிமை கொள்வதற்காக அல்ல. இதனை மாணிக்கவாசகர்,