பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

387


மாணிக்கவாசகர் சொல்கிறார். 'புறம்புறம் திரிந்த செல்வமே' என்று. அது என்ன? ஒருவருக்கு ஒன்றைச் செய்தால் தொடர்ந்து அதைப் பின்பற்றி அனுபவிக்கிறாரா? என்று பார்க்க வேண்டும். தேவைக்குரிய குணங்கள் அமைந்த சமயம் நம்முடைய சமயம். இந்துப் பேரவை; ஆலயங்களின் ஒருங்கிணைப்புப் பேரவை. இந்த நாட்டில் இருக்கின்ற சமய அமைப்புகள் எல்லாம். உயர்ந்த நோக்கம் ஒன்றிற்காகத் தியாகம் செய்து, இந்த நாட்டில் எதிர்காலத்தில் நம்முடைய மேன்மைகொள் சைவநீதி நின்று விளங்க வேண்டும். அந்தப் பொறுப்பை நண்பர் கோடிவேல் அவர்கள் எடுத்து முடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள்; எண்ணுங்கள்; சிந்தனை செய்யுங்கள்; வழிபாடு செய்யுங்கள்; அதன் மூலம் அளவு கடந்த ஆற்றலைப் பெற்று, உங்கள் பொறிகள் புலன்கள் வாயில்களிலே தேக்கி, வீட்டையும் வீதியையும் காப்பாற்றுங்கள்; வாழுங்கள்; வாழ்வியுங்கள் என்று கேட்டுக் கொண்டு வாழ்த்தி விடைபெற ஆசைப்படுகிறேன்.