பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈழத்துச் சொற்பொழிவுகள்

415


கலைகள் நயத்தக்க கருத்துக்களைப் பரவச் செய்யப் பயன்படவேண்டும்; கலைஞர்களும் தேவையானவற்றைக் காட்ட வேண்டும்; போதிக்கவேண்டும். மக்கள் விரும்புவதைக் காட்டக்கூடாது. மக்களுக்கு எது தேவையோ அதைக்காட்ட வேண்டும்! வாழ்க்கை ஒரு நாடகம்; நாம் எல்லாம் நடிகர்கள். நடிகர்களிடத்திலே நல்லுணர்ச்சி உண்டென்றால்தான் நாடகம் சிறக்க வழியுண்டு; நல்லுணர்ச்சியோடு நற்சிந்தனை யாளரைப் படைக்கக் கலைகள் உதவ வேண்டுமெனக்கேட்டு வாழ்த்தி விடைபெறுகிறோம்.


கொழும்பிலே!


இந்த நூற்றாண்டிலே நமது சமயத்தைப்பற்றிய சிந்தனை அருகிவருகிறது. வாழ்வுப் பிரச்சனைகளாலும் வேறுசில சூழ்நிலைகளாலும் கடவுள் நெறி பற்றிய எண்ணம் குறைந்து வருகின்றது. சிவநெறித் தத்துவத்தின் வழி வாழ்தல் என்பதும், சைவசமயக் கொள்கைவழித் தொண்டு என்பதும் இப்போது மாறிக் குழம்பிக்கிடக்கின்றன. இது ஒருவிதக் கலப்பாலும்-கலப்பினாலுண்டான சபலத்தாலும் வெள்ளத்தால் அள்ளுண்டு போவதைப் போன்றநிலை எப்படியோ வந்து புகுந்துவிட்டது. நான் பிறமத எழுத்தாளனல்லன். ஆனால் நமக்கென ஒருகால் தேவை - ஒரு நெறி தேவை என்பவன். கலப்பு என்பது சுயத்துவத்தை அழிக்கவல்லது. உலகியல் நாகரிகங்களின் வரலாற்றிலே ஒன்றையொன்று கெளவி விழுங்கிய செய்திகளைப் படிக்கிறோம். மற்றையக் கொள்கைகளை - நெறிகளைப் பாராட்டுவதோடு, நமது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வலுப்படுத்த உழைக்கவேண்டும்.

சைவசமய வளர்ச்சிபற்றி “வரைபடம்” (Graph) படம் போட்டுப்பார்த்தால் நிலைமை பளிச்செனப் புலப்படும். இந்நிலைமாற - மாற்றப்பட நாம் தீவிரமாக முனைய