ஆலயங்கள் சமுதாய மையங்கள்
99
ஆலம் வைத்த கண்டத்தவர் தொண்டராம் அன்பர்
நீல நக்கனார் என்பவர் நிகழ்த்துளா ரானால்
3.வேத உள்ளுறை யாவன விரிபுனல் வேணி
நாதர் தம்மையும் அவரடி யாரையும் நயந்து
பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே
காதலால் அவை இரண்டுமே செய்கருத்துடையார்.
4.மெய்த்த ஆகம விதிவழி வேதகா ரணரை
நித்தல் பூசனை புரிந்தெழு நியமும் செய்தே
அத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலா
இத்திறத்தன பணிகளும் ஏற்றெதிர் செய்வார்.
5.ஆய செய்கையில் அமருநாள் ஆதிரை நாளில்
மேய பூசனை நியதியை விதியினால் முடித்துத்
தூய தொண்டனார் தொல்லை நீடயவந்தி அமர்ந்த
நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார்
23.அ.மின்னு செஞ்சடை வேதியர்க் காமென்று
செந்நெல் இன்னமுதோடு செங்கீரையும்
மன்னு மைந்துணர் மாவடுவும் கொணர்ந்து
அன்ன என்றும் அமுது செய்விப்பரால்.
ஆ.நண்ணிய வயல்கள் எல்லாம் நாடொறும் முன்னர் கான
வண்ணவார் கதிர்ச் செஞ்சாலி ஆக்கிட மகிழ்ந்து சிந்தை
அண்ணலார் அறுத்த கூலி கொண்டு “இஃது அடியேன் செய்த
புண்ணியம்” என்று போத அமுது - செய்விப்பாரானார்