பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


24. திங்கள் சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணாமுன்னே
அங்கணர் கருணைகூர்ந்த அருள். திருநோக்கம் எய்தத்
தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டகல நீங்கிப்
பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் அன் புருவமானார்
(பெரிய புரா.753)
25. எய்தியசீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக் கேற்பக்
கொய்த மலரும் புனலும் முதலான கொண்டணைந்தார்
மைதழையும் கண்டத்து மலைமருந்தை வழிபாடு
செய்துவரும் தவமுடைய முனிவர் சிவகோசரியார்
(பெரிய புரா.784)
26. வந்து திருமலையின்கண் வானவார் நாயகர் மருங்கு
சிந்தை நியமத்தோடும் செல்கின்றார் திருமுன்பு
வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகலமிதித்தோடி
“இந்த அனுசிதம் கெட்டேன் யார்செய்தார்” என்றழிவார்.
(பெரிய புரா.785)
27. “அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாம் என்றும்
அவனுடைய நிலை இவ்வாறறிநீ” என்றருள் செய்தார்.
(பெரிய புரா.806)
28. நீரிடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான்
போருடைச் சுக்கிரீவன் அனுமன் தொழக்