பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





5


தலைமையுரை

ஈரோடு சைவர் மாநாடு — 24-4-53




“கண்ணார் நுதலோய் கழலிணைகள்
கண்டேன் கண்கள் களிகூர
எண்ணா திரவும் பகலும்நான்
அவையே எண்ணும் அதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும்
வந்துன் கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ
அடிமை சால அழகுடைத்தே.”

சித்தாந்த சைவப் பெருமக்களே! தாய்மார்களே! மறைத்திரு ஞானியாரடிகளின் அருள் உள்ளத்தில் அரும்பி அன்பர்கள் உள்ளத்தில் மலர்ந்து தொண்டர்தம் தொண்டின் திறத்தால் பல்லாண்டுகளாகத் தென் தமிழ்நாட்டில் தெய்வ மணத்தை வழங்கிவருகின்ற சைவ சித்தாந்த சமாஜத்தின் ஆண்டுவிழாவில் கலந்து கொள்ள வண்ணப் பணித்து வா வென்று வான்கருணை செய்த ஈரோடை அப்பரின் இணையடிகளைச் சிந்தித்து வாழ்த்துகின்றோம். இத்தகு