பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



23 அவாவை நீத்தல் எப்படி?


முன்னுரை

வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்க்கையின் தேவைகள் நிறைவேறினாலே வாழமுடியும். தேவைகள் ஆசைகள் இல்லாமல் நிறைவேறுமா? ஆசைகளை நீக்கி வாழ எல்லாரும் என்ன துறவிகளா? துறவிகளில்கூட ஆசையை விட்டவர்கள் இன்று யார்? இன்றைய துறவிகள் விளம்பரம், பெருமை, இவற்றில் சராசரி அரசியல் வாதிகளை விடக் கூடுதலாகவே ஆசைப்பட்டு அலைகிறார்கள்; திரிகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ஆசையை அகற்றுவது எப்படி? இப்படி ஒர் உரத்த சிந்தனை! -

வாய்த்துவிட்டது வாழ்க்கை ! வாழ்ந்தேயாக வேண்டும்! தப்பித்து ஓடுதல் இயலாது. இயன்று ஓடினாலும் கோழைத் தன்மையாகும். தற்கொலை செய்து கொள்ள மனம் இல்லை. ஒரோவழி மனம் வந்தாலும் அறநெறி ஏற்காது; ஆட்சியின் காவலும் ஏற்காது. ஆதலால் வாழத் துணிதலே புத்திசாலித்தனம்; நன்றும் கூட!

வாழ்வதற்குப் பொருள்கள் தேவை. “பொரு ளில்லார்க்கு இவ்வுலகமில்லை!” என்பது திருக்குறள் வாழ்