144
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
கரிய மிடறு முடையார் கடவூர்
மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவார் அவர்
எம் பெருமா னடிகளே!
என்பது. பெரிய விடைமேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே என்பது இத்திருப்பாடலின் நான்காம் அடிக ளாகும். பெரிய விடைமேல் வருவார் என்பது எதிர் காலத்தில் பெரிய பொறுப்புகளுடனும் ஊர்திகளுடனும் வருவார் என்றும் அவர் அடிகள் என்றும் திருவருள் உணர்த்துவதாக மகாசந்நிதானம் பொருள் கொண்டார்கள்.
மேலும் இத்திருப்பதிகத்தின் ஏழாம் திருப்பாட்டு,
பாசமான களைவார் பரிவார்க்கமுத மனையார்
ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்
காசை மலர்போல் மிடற்றார்
கடவூர்மயான மமர்ந்தார்
பேச வருவார் ஒருவர் அவரெம்
பெருமா னடிகளே!
என்பதாகும். இதில் பேச வருவார் ஒருவர். அவர் எம் பெருமான் அடிகளே! என்று வருவது கந்தசாமித் தம்பிரானின் பேசும் ஆர்வத்தை உறுதி செய்கிறது. மேலும், சிறப்பாகப் பேசி வருவார் என்றும் திருவருள் உணர்த்துகிறது. அது மட்டுமல்ல அடிகள் என்ற பெயர் பெற்று விளக்கமுற வாழ்வார் என்றும் சொக்கநாதர் அருள்பாலித்துள்ளார். இனி, குன்றக்குடிக்குப் போவதுதான் ஒரே வழி, சொக்கநாதர் ஆணை! என்று அருளித் திருநீறு வழங்கி வாழ்த்தினார்கள் மகாசந்நிதானம். -
குன்றக்குடி ஆதீனத்தாருக்கு மிக்க மகிழ்ச்சி. உடனே அவசர உணர்வுடன் தருமபுர ஆதீனத்தின் அலுவலர்கள்,