பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உடைய ஆதினகர்த்தர்களும் தம்பிரான்களும் இருந்தனர் என்பது நினைத்து மகிழ வேண்டிய ஒன்று.

மருது சகோதரர் (கி.பி. 1780-1801) காலம், குன்றக்குடி, ஆதீனத்தில் சங்கரலிங்க முனிவர் என்ற தம்பிரான் இருந்தார், சங்கரலிங்க முனிவருக்கு மருது பாண்டியர் பாத காணிக்கையாக வைத்த-செம்பொற்காசுகளை ஏற்க மறுத்து, அதை வெள்ளையரோடு போராடப் பயன்படுத்திக் கொள்ளும்படி திருப்பித் தந்த பெருந்தகை அவர். ஆனால், மருது பாண்டியர் அந்தப் பொற்காசுகளைக் கொடுத்து ஒரு கிராமத்தை வாங்கி செம்பொன்மாறி என்ற பெயர் வைத்து அறக்கட்டளை ஒலை எழுதி, குன்றக்குடி ஆதீனத்தின் குருமுதல்வராய் வருவோர் நலனுக்குரிய கட்டளைச் சொத்தாக அதை உரிமைப்படுத்தினர். சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புகொண்டு அதை ஊக்குவித்த பெருமை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்துக்கும் உண்டு.

38-வது ஆதீனகர்த்தர் ஆறுமுகத் தேசிகர். இவர் காலத்தில் ஆதீனத்தில் சபாபதித் தம்பிரான் இருந்தார். இந்தத் தம்பிரானிடம் நிர்வாகப் பொறுப்பை விட்டிருந்தார் ஆதீனக்கர்த்தர். ஆதீனகர்த்தருக்கும் சபாபதித் தம்பிரானுக்கும் நிர்வாகத் துறையில் கருத்து மாறுபாடுகள் வந்ததுண்டு. ஆயினும், அவை புகையாமலும் எரியாமலும் ஆதீன நலனுக்காக இருவரும் காத்துக்கொண்டவர்கள். ஆதீன - கர்த்தர் நல்ல தமிழறிஞர். பூஜை, வழிபாடுகளில் தம்பிரான் நல்ல உழைப்பாளி! ஆதீனத்தின் பொருளாதாரச் செழிப்புக்கு வழிகண்டவர். குன்றக்குடி ஆதீனத்தைப் பொறுத்தவரையில் சபாபதித் தம்பிரான் செய்த பணி மகத்தானது. - -

43-வது பட்டம் பொன்னம்பலத் தேசிகர். இந்த ஆதீனத்தின் மடாதிபதியாக வந்ததே ஒரு போராட்டத்தின்