பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

151



வழிதான்! அவர் வாழ்க்கையில் தொடர்ந்து போராட்டம்! வாகீசம்பிள்ளை என்பவர் பொன்னம்பலத் தேசிகர் என்ற திருநாமத்துடன் பட்டத்துக்கு வந்தார். மடத்தில் ஒதுவாராகவும், நிர்வாகப் பணிப் பொறுப்பு முகவராகவும் இருந்தவர், இவர் நன்றாகத் திருமுறை பாடுவார். வீணை வாசிப்பார். இவருக்கு முந்திய மகாசந்நிதானம் அண்ணாமலைத் தேசிகர் பட்டத்தில் இருந்த காலத்தில் வட்டிக்கடைக்காரர்களிடம் சிக்கிக் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தார். வட்டிக்குக் கடன் வாங்கினாலே வாழ்ந்தாற்போலத்தான்! அதனால் தான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தன் பதவிக் காலத்தில் வட்டிக்கடைகளை அகற்றச் சட்டமியற்றினார்.

அந்தக் காலத்தில் சில பேரங்களை இழப்புக் கருதி வாகீசம் பிள்ளை மறுத்து வந்துள்ளார். இதனால் வட்டிக் கடை முதலாளிக்கும் வாகீசம் பிள்ளைக்கும் பகை மூண்டது. பகை வன்முறை அளவுக்குக்கூட வளர்ந்தது. அதனால் வாகீசம் பிள்ளை ஆத்தங்குடியில் ராம. கா. அரு. வள்ளியப்பச் செட்டியார் வீட்டில் சில நாட்கள் மறைவாக இருந்தார். இந்த வள்ளிப்பச் செட்டியார் பேரர் ஏ.ஆர். லட்சுமணன், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைக் கல்லூரியில் இப்போது 'டீன்' ஆகப் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், அண்ணாமலைத் தேசிகர் தமக்கு அடுத்த வாரிசு நியமிக்க வேண்டிய கட்டாயச் சூழல் உருவாயிற்று. வட்டிக்கடை முதலாளி, சண்முகத் தம்பிரான் என்பவரை மடாதிபதி ஆக்க முயற்சி செய்தார். அதற்குரிய கைக்கூலிகளும் கிடைத்தனர். தனக்கு அனுசரணையாகக் குன்றக்குடி மகாசந்நிதானம் எண்ணம் கொள்ளத்தக்கவாறு அமைத்துக்கொள்ள, குன்றக்குடி மகாசந்நிதானத்தை யாரும் சந்திக்க முடியாதபடி தடை செய்து காவல் போட்டு விட்டார். திருமடத்துக்குள் யாரும் பிரவேசிக்க இயலவில்லை. முறை மன்ற ஆணை வேறு பெற்றுவிட்டார். எனவே, மடம்-போலீஸ் காவலில் இருந்தது.