பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

495



எப்படி "தான்” ஆகவேண்டும் என்று மனிதன் சிந்திக் இறானோ-பிரார்த்திக்கிறானோ அப்படியே அவன் ஆகிறான் என்று ஆன்றோர்கள் சொல்லுவார்கள்.

"ஐம்புலன்களை வெல்ல வேண்டும்; அறிவினையும் ஆற்றலையும் பெருக்கிக் கொள்ள வேண்டும்; மானிடச் சமுதாயத்தின் மேன்மைக்காகப் பாடுபட வேண்டும்; பிறரை உண்பித்து உண்ண வேண்டும்; மகிழ்வித்து மகிழ வேண்டும்; வாழ்வித்து வாழ வேண்டும்.

இத்தகைய வாழ்க்கை நெறியில் நாம் வாழ்ந்திட அருள் புரிய வேண்டும் என்று நாளும் இறைவனைப் பிரார்த்திப்பதற்கு "திருவருட் சிந்தனை” என்கிற இந்த நன்னூல் வழி காட்டும்.

ஒவ்வொரு நாட் காலையிலும், எத்தகைய உறுதி மொழியை, ஒவ்வொருவரும், எடுத்துக் கொண்டாக வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறது. முதல் பிரார்த்தனையே இந்த ஆண்டினை உழைப்பு ஆண்டாக்கி செலவிட உறுதி எடுத்துக் கொள்ள, அருள்செய் என்பதாக இறைவனை வேண்டுவதாக அமைந்துளது.

எதிர்காலத்தைப் பற்றிக் கனவு கண்டு கொண்டும், கடந்த காலத்திற்காகக் கண்ணிர் சிந்திக் கொண்டும், நிகழ் காலத்தை வீணடித்துக் கொண்டும் காலம் கழிக்கும் காலத்தின் அருமை தெரியாதவர்களுக்காக மேலும் பல பிரார்த்தனைகளும் இந்நூலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இறைவனையும் "ஐந்தொழில் நிகழ்த்தும் முதல் உழைப்பாளி" என்று அழைத்துச் சிறப்பிக்கும் அடிகளார் இடையீடு இல்லாது, ஒய்வே இல்லாது, தற்செயல் விடுப்புகூட இல்லாது, இறைவன் உழைக்கும் உழைப்பின் திறத்தை எடுத்துக்காட்டி பலரையும் உணர வைக்கிறார்.

உண்டு, நடமாடும் நடைப் பிணங்களாக, வாழும் பல மாந்தர்கள் தாமே திருந்த எத்தகைய பிரார்த்தனைகளைப்