இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்
547
வறுமை நீங்கிடப் புறப்பட்ட இலட்சியப் பயணம்-தொடர் பயணம்! புரட்சிச் சுடர்பிடித்துத் தடம் மாறாத, இலட்சியப் பயணம் என்றும் தொடரும்.
- தொழத்தகு சுந்தரன் தோழமைக் குரியன்
- பழுத்த பாவலன் பாரோர் போற்றும்
- வலிய தொண்டன் வஞ்சமில் நெஞ்சும்
- மெலிபிறை சூடிய மேன்மைக் கொடைஞன்
- கண்ணுதற் பெருமான் கருத்தும் பிணைந்தது
- பண்ணுறத் தோய்ந்த பைந்தமிழ் ஒன்றால்;
- அதுபோல்,
- குன்றக் குடியிற் குடியமர்ந் ததுமுதல்
- என்றன் செந்தமிழ்ப் பாட்டால் இணைந்தவர்
- ஈடுபட் டென்னைக் 'கவியர' சென்றனர்,
- பீடுடை அடிகள் பெயருக் கேற்றவர்
- நாடுயர் வழிகள் நல்கிய பெருமகன்,
- மண்ணிற் புழுவென மடியாது மாந்தர்
- மண்ணில் நிமிர்ந்து வாழச் சொன்னவர்,
- எளியோர்க் கிரங்கும் இளகிய நெஞ்சர்.
- எளிமையும் வறுமையும் இருப்பதை நாடார்,
- உழைப்போன் வயிற்றில் உறுபசி வந்து
- வளைத்து வாட்டி வருவது தாளார்,
- ஆலயம்பதி னாயிரம் எழுப் புவதின்
- மேலாம் கல்விச் சாலை எழுப்புதல்
- எனப்பறை சாற்றும் இயல்பினர், தொழில்கள்