திருவள்ளுவர் காட்டும் அரசு
179
பழங்காலத்திலே நமது சிற்றரசர்களிலே மூவேந்தர் காலங்களிலேகூடக் குடிக்கு ஒரு மரக்கால் என்று நெல் எடுத்து, தன்னுடைய வாய்க்கால் வருகின்ற வரப்புக் கால்களை எல்லாம் பழுது பார்த்துச் சீர்செய்து முறைப்படுத்தி வைப்பார்கள். ஒரு சொட்டுத் தண்ணீர் பெய்தால் கூட அது கண்மாய்களுக்கும், ஏரிகளுக்கும்தான் வந்து சேரும்.
இப்பொழுது ஒரு சொட்டுத்தண்ணீர் பெய்தால் இடையிலே இருக்கின்ற திட்டுமுட்டுகளிலே தங்கி வருவதற்குள்ளாக வீணாகிவிடுகிறது.
ஆக, ‘வாரி பெருக்குதல்’ என்ற ஒரு கடமையை அரசுக்கு வற்புறுத்துகிறார்.
வாரித் தீர்வை என்றே தமிழக அரசு ஒரு தீர்வை வாங்கி, இந்த வாரி, கால்வாய்களை எல்லாம் பழுது பார்த்திருக்கிறது!
ஆனால் இப்பொழுது அது ‘வாரி பெருக்குதல்’ என்கிற ஒரு வேலையை முற்றிலும் செய்வது இல்லை.
அது திருவள்ளுவர் கண்ட அரசிலே மிகச் சிறந்த சிறப்பு.
நிலத்தை வளப்படுத்த வேண்டும் என்று சொன்னார்.
பெரும்பாலும் நம்முடைய நிலம் எய்த்துப் போய்க் கிடக்கிறது.
ஒரு சாண் மண், இரண்டு சாண் மண், கிண்டிக் கிண்டி பத்து நூறு ஆண்டு அவன் எடுத்துக்கொண்டு இருந்திருக்கிறான்.
நீ எவ்வளவு எடுத்தாயோ, அதிலே பத்தில் ஒரு பங்காவது நிலத்திற்குத் திரும்பக்கொடுக்க வேண்டாமா?