பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஒருவன், தான் அறியத்தக்க நூல்களை அறிந்து அடங்கி ஒழுகுவானாயின், அவ்வடக்கம் பிறரால் அறியப்பட்டுச் சிறந்த நன்மை பயக்கும்.

1. கற்று அறியவேண்டிய நூல்களைக் கற்று, அறிய வேண்டியவைகளை அறிக.

2. கற்று அறியவேண்டிய நூல்கள் திருக்குறள், திருமுறைகள், திருவாய்மொழி (திவ்வியப் பிரபந்தங்கள்) முதலியன. ஆங்கிலத்தில் சேம்சு ஆலன் எழுதிய வாழ்க்கை நூல்கள்.

3. ஆராய்ந்த அறிவின் முடிவு, அடக்கமுடையவராயிருத்தல் என்பதறிந்து அடக்கமாக வாழ்க.

4. அறிவுடைமையின் காரணமாக அகந்தை வராமல் அடக்க முடையவராயிருக்கவும். இதனால் மேலும் அறிவு வளரும். பாராட்டப்பெறும்.

‘நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.’

124

இயற்கையின் ஒழுங்கு பிறழா நிகழ்ச்சிகளுக்குள் நின்று ஒழுகி அடக்கமுடையராய் வாழ்பவரின் உயர்ச்சி, மலையினும் உயர்ந்தது.

வாழ்க்கையின் அமைப்பும் முறையும் இயற்கையோடிசைந்தது. உயிர்க்குப் புலன்களும், உடற்குப் பொறிகளும் இன்ப நுகர்ச்சிக்கும் அவ்வழியே வேட்கைத் தணிவிற்கும் தெளிவிற்குமாகவே அமைந்தவை. ஐம்புலன் நுகர்வு இழிவன்று; தவறன்று; முறையன்று; குற்றமுமன்று. ஆனால் ஐம்புல நுகர்வு தலையாய அன்பையும், அவ்வழியிலான இன்பத்தைக் குறிக்கோளாகக் கொண்டதாயும் இருத்தல் வேண்டும். நுகர் தலிலும் வெறித்தன்மை கூடாது; அடக்கம் இருத்தல் வேண்டும். நுகர்வில் வெறித்தன்மை தோன்றின்