பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

93


உலகத்தில் முறைகேடான வழிகளில் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளவும் அதிகாரத்தைப் பிடித்து வைத்துக் கொள்ளவும் செய்யும் சூழ்ச்சியேயாகும். இந்தியா உலகத்திற்கே ஞானத்தைத் தரக்கூடிய ஆன்ம வலிமையுடையது. இந்திய மக்களின் ஆன்ம ஈடேற்றத்திற்கு வேறு சமயநெறி தேவையில்லை. காலச் சூழ்நிலையின் காரணமாக இந்திய சமயத்தைச் சார்ந்த மக்கள் தங்களுடைய முறைகேடான பழக்க வழக்கங்களின் மூலம் இந்திய சமயத்தைக் கறைப்படுத்தியிருக்கலாம் அல்லது குறைப்படுத்தியிருக்கலாம். ஆனாலும் இந்திய சமயம் பொதுமையுடையது. இந்திய சமயத்திற்குச் சாதிகள் இல்லை. தீண்டாமை இல்லை. எல்லையே இல்லை. இந்திய சமயத்தின் கொள்கை உயிர்க்குல ஒருமைப்பாடேயாகும். இந்திய சமயத்தைக் குறைப்படுத்துகிறவர்களை எதிர்த்து நிற்க முடியாமல், திருத்திய நிலைகளுக்கு முயற்சி செய்யாமல், மதம் மாறுவது தன்னம்பிக்கைக்கு மாறான செயல். இந்திய சமயத்தின் உயர்வை அறியாதவர் செய்கை, உலகத்திற்கே உயிரின் மேன்மையை, உயிர்க்குல ஒருமைப்பாட்டை எடுத்துக்கூறி வழி நடத்தும் இந்திய சமயத்தில் இல்லாத மேம்பாடா வேறொரு சமயத்தினால் வரப்போகிறது?

ஆதலால், இந்திய சமயத்தின் அடித்தளத்தில் நின்று கொண்டு மனித குலத்தைப் பிரிக்கும் வேற்றுமைகளை எதிர்ப்போம்! வெற்றி காண்போம்! பாரதியின் அடிச்சுவட்டைப் பின்பற்றி இந்திய ஆன்ம ஞானத்தை உலகத்திற்கு அளிப்போமாக!

"எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்
என்றுரைத் தான் கண்ண பெருமான்;
எல்லாரும் அமரநிலை எய்தும் நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும்-ஆம்