பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

203


கருதிச் சொற்போரால் தொண்டாற்றியவர். எல்லாவற்றிக்கும் மேலாக சீர்மை பொருந்திய ஒரு பண்பை அணிகலனாகக் கொண்டவர். அது என்னவென்றால் தன்னலமின்றி என்றும் பிறர் நன்மைக்கென்றே அரும்பாடு பட்ட பற்றற்ற துறவியாய் வாழ்ந்தமையே. அவற்றையெல்லாம் கண்ட பாரதியார் மனமார வாய் நிறைய வாழ்த்துகிறார். அந்தக் கவிதையைப் பார்ப்போம்:-

"கல்வியைப்போல் அறிவும், அறிவினைப்போலக்
கருணையும் அக்கருணையைப் போலப்
பல்வித ஊக் கங்கள் செயும் திறனும்
ஒரு நிகரின்றிப் படைத்த வீரன்
வில்விறலாற் போற் செய்தல் பயனிலதாம்
என அதனை வெறுத்தே உண்மைச்
சொல்விறலாற் போர் செய்வோன்;
பிறர்க்கன்று தனக்குழையாத் துறவி யாவோன்”

இதன் மூலம் தலைவர்களுக்குக் கல்வியும், அறிவும், கருணையும், ஊக்கமும், தீர்க்காலோசனையும், தன்னலத்துறவும் எவ்வளவு அவசியம் என்பதைப் பாரதியார் உணர்த்துகிறார். தமிழ் இலக்கியங்களிலெல்லாம் மிகச் சிறந்த பண்பாடாகப் பேசப்படுகின்ற தன்னலத்துறவு அறிந்தின் புறத்தக்கது.

"தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே"

இவ்வுலகம் உண்டென்று கூறுகிறது புறநானூறு. "தனக்கென்று ஒன்றானும் உள்ளான், பிறர்க்கே உறுதிக்கு உழந்தான்" என்பது குண்டலகேசி. "தனக்கென வாழாப் பிறர்க்குரியானன்" என்பது அகநானூறு. "பிறர்க்கற முயலும் பெரியோய்" என்பது மணிமேகலை. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வழி காட்டும் தலைவனுக்கு இந்தத் தன்னலமறுக்கும் பண்பு