பாரதியின் சக்தி வழிபாடு
255
நல்லது என்று தெரிந்து தெளிந்த ஒன்றை உறுதியாகக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். இவையெல்லாம் ஆற்றலை வழிபடுவோரின் அடையாளங்கள்; குணங்கள்; ஒழுக்கங்கள் இதனை,
விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்;
நசையறு மனங்கேட்டேன்; - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்;
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடுதல் அகங்கேட்டேன்!
அசைவறு மதிகேட்டேன்; - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
என்று பாரதி பாடுகின்றார்.
இன்றைய தமிழகத்தின் நிலை இரங்கத்தக்கது. இன்றைய தமிழகத்தில் வாழ்வோர் சிலரே பிழைப்பு நடத்துவோர் பலர். இந்தச் சூழ்நிலையில் பாரதியின் அடிச்சுவட்டில் ஆற்றலை - அன்னை பராசக்தியை வழிபட்டுப் பாரதி பெற்ற திறன்களைப் பெற்று மாநிலம் பயனுற வாழ்தல்; இன்று காலம் விதித்துள்ள கட்டளை.