பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கூலியாளை அழைத்தாள்; அவனிடம் பேரம் பேசினாள். கூலியாள் மிகவும் நல்லவன்.

அதனால், அதிகம் கூலி கேட்கவில்லை. பசிக்கு கொஞ்சம் உதிர்ந்த பிட்டுப் போதும் என்றான். உதிர்ந்த பிட்டு வாங்கிப் பசியாற உண்டான். முடிச்சில் பெற்றும் கொண்டான்.

வைகைக் கரை அடைக்க, தட்டும், மண்வெட்டியும் சுமந்து சென்றான். மண் வெட்டினான், சுமந்தான். உடைப்பில் கொட்டினான்; பாடினான்; விளையாடினான்; களைத்துப் போனான்; தட்டை தலையணையாகக் கொண்டு தூங்கினான்.

பாண்டிய அரசன் உடைப்புக்கு அணை போடுவதைப் பார்க்க வந்தான். வந்தியின் ஆள் வேலை பார்க்காமல் தூங்குவதைக் கண்டு எழுப்பினான். அவனோ எழுந்திருக்க வில்லை. உடன் கையில் இருந்த பிரம்புகொண்டு அடித்தான்.

அவ்வாறு அடித்தபோது அரசன் முதுகிலும் அடி விழுந்தது. இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களின் முதுகிலும் அடி விழுந்தது! அரசன் உணர்ந்தான்! அனைவரும் உணர்ந்தனர். கொற்றாளாக வந்தவன் கொற்றாளன் அல்லன். தனக்குவமை இல்லாதவனாகிய திருப்பெருந்துறை ஈசன் என்று உணர்ந்தனர்.

மாணிக்கவாசகர் வரலாற்றில் நரியைப் பரியாக்கியது, பரியை நரியாக்கியது பிட்டுக்கு மண் சுமந்தது இவை அனைத்துக்கும் அவர் அருளிச் செய்த திருவாசகத்தில் சான்று உண்டு, பரியை நரியாக்கியதை,

“நரியைக் குதிரை யாக்கிய நன்மையும்
ஆண்டு கொண்டருள அழகுறு திருவடி
பாண்டி யன்தனக் குப்பரி மாவிற்று