சீற்றம்
141
நான் இடையில் குறுக்கே ஒன்றும் பேசவில்லை என்னை வைத்துப் பேசுவது அவர்களுக்குச் சிக்கலாக இருந்தது.
'விருப்பம் இல்லாதவளை வாழ வேண்டும் என்று வற்புறுத்துவது முரட்டுத்தனம் அல்லவா" என்று மட்டும் கேட்டேன்.
'முரட்டுத்தனம் கூடப்பரவாயில்லை, ஆபாசமாகவும் இருக்கிறது, தாம்பத்திய உறவு தரவேண்டும் என்று வற் புறுத்துவது அநாகரிகமாகத்தான் இருக்கிறது" என்பதை அவரே ஒப்புக் கொண்டார்.
'நேரில் நீங்கள் போய்க் கூப்பிட்டுப் பார்ப்பது தானே' என்றேன்.
'அவள் வரத்தேவையில்லை என்று பிடிவாதமாக இருக்கிறாளே”.
'நான் அங்கு இருந்தவரை அவள் அப்பா உங்கள் நோட்டீசுதான் காட்டினார். இப்பொழுது விவாகரத்துக் கேட் பதாக நோட்டீசு வந்ததாக உங்க பிள்ளை சொல் கிறார்” ஆச்சர்யமாக இருக்கிறது. அதிர்ச்சியாகவும் இருக்கிறது. பிடிக்கவில்லை என்றால் விவாகரத்துத் தானே வழி' என்றேன்.
'அவன் ஒப்புக் கொள்ளவில்லை. அவள்மேல் அவன் உயிர் வச்சிருக்கிறான்".
'மாற்றிக் கொள்ள வேண்டியது தானே'.