பக்கம்:குப்பைமேடு.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி

237

எல்லாம் உங்கள் விளம்பரத்துக்காகவே ஆகும். அமைச் சர்களுக்கு உங்களால் அழைப்பிதழ் அனுப்பாமல் இருக்க முடியுமா? அந்தக் காண்ட்ராக்டர் அமைச்சர் பெரு மக்கள் என்னுடைய திருமணத்துக்கு ஏன் வர வேண்டும்? இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு அவர்களோடு வணிக சல்லாபம் ஆட இது ஒரு வாய்ப்பாக அமைத்துக் கொள்கிறீர்கள் அவ்வளவு தானே!

இன்று பெரிய பெரிய கலியாணக் கூடங்களிலே கூட் டம் வழிகிறதே ஏன்? பையனையும் பெண்ணையும் வாழ்த்தவா வருகிறார்கள். அங்கே வருகிறார்களைப் பார்த்துப் போலிக் கும்பிடுகள் போட வேண்டி இருக் கிறது. அவர்கள் கொலுப் பொம்மையாக முன் நின்று படத்துக்குப் போஸ் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதிலிருந்து உங்களால் விடுபட முடியுமா? சிந்தித்துப் பாருங்கள்.

எனக்கு உங்கள் சார்பு தேவை இல்லை; நான் எப் பொழுதோ விடுபட்டு விட்டேன். எப்பொழுது மற்ற வனின் மனைவி என்று ஆகி விடுகிறேனோ பிறகு உங்கள் சார்பு எனக்குத் தேவை இல்லை. அக்காவின் அவல சரிதம் என்னைத் தொடராது. மூட்டை முடிச்சுகள்ைக் கட்டிக் கொண்டு உங்கள் வீட்டைத் தேடி வருவேன் என்று எதிர் பார்க்க வேண்டாம். ஆனால் ஒன்று. அவர் எப்படி நட்ந்து கொள்வார் என்று என்னால் கூறமுடியாது. கேட்டுச் சொல்கிறேன். அவகாசம் தேவை" என்று கேட் டுக் கொண்டாள்.

செல்வ மகளிடம் செல்வக் கோமான் பேசிய புதிய உரை அவளைக் குலுக்கி விட்டது. அப்படியே ஆட்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/239&oldid=1116167" இலிருந்து மீள்விக்கப்பட்டது