குப்பைமேடு
51
இங்கே இவர்கள் சுற்றுவதால் அவற்றைப் பற்றுவதால் நோய்களுக்கு ஆளாவார்கள் என்ற எண்ணம் என்னை வாட்டியது. குப்பைக்கு ஒரு தொட்டி தாளுக்கு ஒரு தொட்டி என்று வைத்தால் இதில் இழிவு மறையுமே என்று எனக்குப்பட்டது. இதை அவரிடமும் கூறினேன்.
சார் இது தெரியுமா?" என்று கேட்டார்.
ஏதோ (புதிதாகச் சொல்லப் போகிறார் என்று அவரைப் பார்த்தேன்.
"கிழிந்த தாள் தெருவில் போட்டால் ஐந்து டாலர் அபராதமாம் சிங்கப்பூரில்' என்றார்.
இது எனக்குத் தெரிந்த செய்திதான்.
"இங்கு இந்தத் தண்டனை தேவை இல்லை. போட்ட வுடன் பொறுக்க ஆள் இருக்கிறார்கள்' என்றேன். அவர் நகைத்தார். அதற்கப்புறம் அவனைப் பற்றி நாங்கள் அதிகம் விமரிசிப்பது இல்லை.
-13
அவருக்கே ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்தப் பின்னணி இளைஞர்களில் ஒருவனை விசாரித்தார்.
'உங்கள் பெற்றோர்கள் உங்களைக் கண்டிப்பது இல்லையா?" என்று கேட்டார்.
'பெற்றோர் என்றால் என்ன? என்று கேட்டனர்.
'அப்பா அம்மா'