பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

குமரிக் கோட்டம்


"சேட் லீலாராமிடம் 25-க்கு அடகு வைத்திருக்கிறேன்."

"ஏன்?"

"சும்மா, தமாஷுக்கு! அந்த மிராசுதாரனின் மருமகனைச் சொல்லிவிட்டீர், உலகமறியாதவன் என்று. இன்னும் மூன்று மாதத்திலே தகப்பனாராகப்போகிற விஷயம் கூட உங்களுக்குத் தெரியவில்லை. இருபத்து ஐந்து ரூபாய் வாங்கித்தான். இரண்டு மாத டாக்டர் பில் கொடுத்தேன், மிச்சமிருந்த பத்து ரூபாய்க்கு, பெர்னாட்ஷா வாங்கினேன்."

பழனியின் குடும்பக் கணக்கு இவ்விதம் இருந்தது. அதே நேரத்தில், குழந்தைவேலச் செட்டியார் தம் குமாஸ்தாவிடம் சொல்லிக்கொண்டிருப்பார். கணக்கு:

வட்டி வரவு ரூ அ.
வடிவேல்பிள்ளை மூலம் 650 0 0
வாடகை வரவு
வில்வசாமி மூலம். 400 0 0
நெல் விற்ற வகையில் வரவு. 2600 0 0
நேத்திரானந்தர் மடத்துக் கைங்கரியச் செலவு 600 0 0
பிக்ஷாண்டார்கோயில் வாகன கைங்கரியச் செலவு 1260 0 0
பிடில் சுந்தரேச ஐயர் மகள் கலியாணச் செலவுக்காக 302 0 0
வாணக் கடைக்கு 46 0 0
பூப்பல்லக்கு ஜோடிக்க 260 0 0

என்று இவ்விதம். செட்டியார் வீட்டிலே, சூடிக்கொள்ள ஆளில்லாததால் மூலையில் குவிந்தன மலர்