பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கீரைத் தண்டு
1

புதிய வீட்டில் சுற்றிலும் செடி கொடிகளைப் போட வேண்டும் என்பது விசாகநாதனின் ஆசை. கண்ட கண்ட செடிகளைப் போட்டால் யாருக்கு என்ன லாபம்? கறி வேப்பிலை மரம் அவசியம் இருக்க வேண்டும்.பசலைக்கொடியும் அவசியந்தான்;எப்போதும் கொத்தமல்லி கிடைக்கும்படி இரண்டு பாத்திகள் இருக்க வேண்டும். மூலிகைகளுக்கென்று சில பாத்திகளாவது வேண்டும்.

அவனுடைய வீட்டுத் தோட்டத் திட்டத்தில் காய்கறி, கனி, மூலிகை, பூஜை மலர் எல்லாம் இருந்தன. வீடு கட்டிக்கொண்டு வந்தபோது சில சமயங்களில், 'இந்தத் திட்டம் உருவாகிவிடுமா? மண் எப்படியோ? பயிரிடும் முறை எதுவோ?’ என்றெல்லாம் தோன்றும்.

ஒன்று மாத்திரம் அவனுக்கு நன்றாகத் தெரியும். கீரைப் பாத்தி போடுவதில் அவன் கெட்டிக்காரன். இது வரையில் அவன் குடியிருந்த வீடுகளில் கையகலம் நிலம் இருந்தாலும் அங்கே கீரைப் பாத்தி போட்டு விடுவான். கீரைத் தண்டில் அவனுக்கு அலாதிப் பிரியம்; அவனோடு பழகி வாழ்ந்த அவனுடைய மனைவிக்கும் கீரைத் தண்டிலே மோகம் ஏற்பட்டுவிட்டது.

அவனுக்குத் தோட்டக்கலை தெரியாது.ஆனால் அந்தக் கலை தெரிந்தநண்பர்கள்இருந்தார்கள். ஒரு நண்பராக இருந்தால் திட்டமாக யோசனை சொல்வார். பல நண்பர்கள் அவனுக்கு இலவசமாகத் தம்முடைய அறிவுத் தானத்தைச் செய்யப் புறப்பட்டபொழுது அவன் எதையென்று வரையறையாக மேற்கொள்வது!

"நீங்கள் எந்த மரம் வைத்தாலும் வையுங்கள். தென்னமரத்தை வைக்காதீர்கள். அதன் வேர் பரவலாகப்