பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவள் குறை

61.

 அதோடு அவர் மற்றொரு காரியமும் செய்தார். சரியாக மணி ஏழு அடித்ததானால், 'நி வீட்டுக்குப் போ" என்று சொல்லிவிடுவார். அதற்குள் என்ன அவசரம்? நான் இருந்துவிட்டுப் போகிறேன்' என்பான். 'இல்லை, எங்கேயாவது போனால் நானே போய் வருகிறேன். எனக்குத்தான் நன்றாக ஒட்டத் தெரிந்துவிட்டதே' என்பார்.

இப்போதெல்லாம் பகலில்கூட ராஜாராம் வண்டியைத் தனியே எடுத்துக்கொண்டு சென்றார். வேலு அவர் வீட்டில் ஏதாவது வேலை பார்த்துக்கொண்டிருப்பான். மாலே ஏழு மணி அடித்தால் வீட்டுக்குப் போய்விட வேண்டுமென்று அவனுக்குக் கண்டிப்பான உத்தரவு.

வேலுவின் மனைவி கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தியைக் கேட்டு ராஜாராம் மனைவிக்கு அளவற்ற மகிழ்ச்சி. 'ஜாக்கிரதையாக இருக்கச் சொல். யாராவது டாக்டரிடம் கொண்டுபோய்க் காட்டு' என்பாள்.

"எங்க மாமியாரைவிடப் பெரிய டாக்டர் யாரும் இல்லை, அம்மா' என்பான் அவன். .

சில நாளாகவே வேலுவுக்கு முகத்தில் பொலிவு: இல்லை. உள்ளுற அவனை ஏதோ வேதனே அரித்துக்கொண்டிருந்தது. ராத்திரியும் பகலும் ராஜாராமுடன் நிழலேப் போல் இருந்த வேலு, சில சமயங்களில்தான் அவரோடு சென்றான். மாலை ஏழு அடித்ததும் வீட்டுக்குப் போனான்.

3

கருவுற்றிருந்த வேலுவின் மனைவி ஒரு நாள் ராஜா ராம் வீட்டுக்கு வந்துவிட்டுப் போனாள். அன்று இரவு ராஜாராமிடம் அவர் மனைவி பேசினாள். -

கொஞ்சநாளாகவே வேலு உற்சாகம் இல்லாமல் இருக்கிறானே; நீங்கள் கவனித்தீர்களோ?" -

'இன்று என்ன புதிய வழக்குத் தொடுக்கப் போகிறாய்?' என்று கேட்டார் ராஜாராம். .